Monday, December 14, 2009

தமிழ்

அல்லித் தாமரையாய்
அழகான தேனிலாவாய்
உள்ளத்தில் நீயிருக்க
ஊணுறக்கம் தோணலையே!

பள்ளிப் பருவத்தில்
பாவையுன் யுவருவத்தில்
துள்ளிக் குதித்ததுவும்...
தூங்காமல் விழித்ததுவும்...

கன்னி நீசெய்ய
காதலினை நினைத்துவிடில்
நெஞ்சம் நொகிழுதடி
நொருங்காமல் வெடிக்குதடி!

பல்லாண்டு யான்செய்ய
பாவிக் காதல்தனை
பொல்லாத எதிரியவன்
‘பொம்பர்’தனில் தான்வந்து
சில்லாட வைத்துவிட்டான்
தள்ளாடும் வாழ்வுதனை.

என்நாளும் யெனையாளும்
என்னுயிரே தமிழ்தாயே!
பந்தாடி யெதிரிகளை
பாடையிலே அனுப்பிவிட
படையெடுத்து வருகின்றேன்....!

No comments:

Post a Comment