Wednesday, December 16, 2009

விழித்திடு மனிதா!

ஆறறிவு மனித உனக்கு
பேரறிவா!
ஓரறிவு கூட இல்லை – வெறும்
சேறறிவு!

காட்டில் என்ன தேடுகிறாய் மனித
பாட்டையா – அதை
நோட்டில் தேடு
வீட்டில் தேடினால்
விரைவில் கிடைக்கும்
உனக்கு பைத்திய ‘வார்ட்டு’!

விட்டிலைப் பார் - அது
குதிக்கிறது மகிழ்ந்து
விளக்கு எண்ணெயில்,
உயிர் போகுமன அறியாமல்….

மனிதா!
பட்டாம் பூச்சியாயிரு
சிட்டாக
தட்டாத உயரத்தில் - சந்தோஷ
சரித்திரம் எழுதி
தன்வாழ்வு எட்டு நாளென அறியாமல் ….

ஈசல் பாடுகிறது சிந்து
பூசலோடு வெளிச்சத்தில்
ஒரு நாள் கழியுமுன்னர்.
அது அறிந்திருக்கவில்லை
தன் வாழ்வு இருபத்தி நான்கு
மணிகள் என்று…..


அதுதான் சொல்கிறேன்
விளித்திடு மனிதா!
இன்று முதல் பணியிருக்கு…

No comments:

Post a Comment