புன்னை மர நிழலே!
பூக்களின் இளந் தளிரே!
தன்னந் தனி மையிலே
தாமரைப் பூச் சோலையிலே
அள்ளி யுனை யெடுத்து
அர வணைத்து முத்தமிட
உனை யின்று எனக்களித்த
உங்கப்பன் என் மாமன்
செய்த தவம் என்னவென்று
செப்பு புள்ள வாய்திறந்து
பஞ்சனையில் நான மர்ந்து
பாடிவார மூன்றாம் பால்
மஞ்ச லிலே நீராடி
மரகத மாய் வந்தவளே!
புன்னகையை சீதன மாய்
பூண்டு இங்கு வந்தவளே!
பொன் நகையை வீசியெறி –அது
பெறுமோ உன் சுள்ளிடையில்.
மாட்டுக்கு சீதன மாய்
மணியொன்று கட்டுபவர் - என்
பாட்டுக்கு சீதன மாய்
பாரதியை தருவாரே?
சீதனமும் நான் பெற்ற
சிந்தனையும் உன் அறிவும்
போதுமடி எனக் கிந்த
பொன்னான சீர் வரிசை!
Thursday, December 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
nice poem
ReplyDelete