Sunday, December 20, 2009

பயணங்கள் தொடரும்…

அன்றொரு நாள் அந்திவான இன்பொழுதில்

அரவமே இல்லாத சில் குளிரில்

ரயிலுக்காய் காத்திருந்தேன்; விழிகள் சேர்த்து

ரண தூரம் கடந்துவந்து ஏறிடவே

பக்கத்து சீட்டில் பஞ்சாமிர்தம்; என்னை

பார்த்து சிலிர்த்தது புன்னகையில்


யாப்பு இலக்கணம் உடைத்தெறிந்தேன்; கவிதை

சாக்கில் எதுகை மோனை எதற்கென்று

மோனை எதுகை திரிந்திடவே; சாட்டில்

பானையை திறந்து பழரசம் பருக

தளை சீர் நினைத்து தடுமாறினேன்

தவணைகள் கேட்டு கவிதை உரையாடினேன்


உம்…மென்றாள்; தாமதம் எதற்கென்றாள்

‘கம்’… என்றேன் தருகிறேன் இப்பவென்றாள்

கொடுக்க நினைத்து; கடுக்க வாங்கினேன்

சிடுக்க அவள் குழந்தையை; அடுத்த

பக்கத்தில் அவள் புருஷன் - சிரிக்க

பத்திரமாய் பாருங்கோ என்குழந்தை யென்றாள்.

No comments:

Post a Comment