அன்றொரு நாள் அந்திவான இன்பொழுதில்
அரவமே இல்லாத சில் குளிரில்
ரயிலுக்காய் காத்திருந்தேன்; விழிகள் சேர்த்து
ரண தூரம் கடந்துவந்து ஏறிடவே
பக்கத்து சீட்டில் பஞ்சாமிர்தம்; என்னை
பார்த்து சிலிர்த்தது புன்னகையில்
யாப்பு இலக்கணம் உடைத்தெறிந்தேன்; கவிதை
சாக்கில் எதுகை மோனை எதற்கென்று
மோனை எதுகை திரிந்திடவே; சாட்டில்
பானையை திறந்து பழரசம் பருக
தளை சீர் நினைத்து தடுமாறினேன்
தவணைகள் கேட்டு கவிதை உரையாடினேன்
உம்…மென்றாள்; தாமதம் எதற்கென்றாள்
‘கம்’… என்றேன் தருகிறேன் இப்பவென்றாள்
கொடுக்க நினைத்து; கடுக்க வாங்கினேன்
சிடுக்க அவள் குழந்தையை; அடுத்த
பக்கத்தில் அவள் புருஷன் - சிரிக்க
பத்திரமாய் பாருங்கோ என்குழந்தை யென்றாள்.
Sunday, December 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment