Sunday, December 6, 2009

ஐந்தாவது ஆண்டில் ….!



வானம்விழ, இடிமுழங்க தானை கொண்டு
வாரிஎழும் கடலலைகள் கூத்திட் டாட
கானமிடம் மயிலினங்கள் கரைந்து ஓட
கங்கையிலே செங்கைமலர் உயிர் திறக்க
விண்டிலர்கள் சண்டியர்கள் வெகுண் டொளிக்க
விட்டிலானோம், விட்டையானோம், அன்று நாட்டில்
சுனாமி அரக்கன் சுமந்து வந்தான் வையநீரை
சூனியமாக, உயிர்கள் என்னவென்பேன் ஐயய்யோ!


வடக்கென்று கிழக்கென்று பார்த்திடா மல்
வஞ்சனைகள் தீர்த்தவுந்தன் திறந்தான் னென்ன
அடுக்களையில் சமயலுடன் அள்ளிச் சென்றாய்
ஆருயிர்கள் உன்கிழைத்த அநீதி யென்ன
இடுக்கண்நீ செய்தவைகள் ஐந்து ஆண்டில்
இறுக்கிறது, புடைக்கிறது, நனைக்கிறது – என்
நெஞ்சத்தை துளைக்கிறது என்ன செய்வேன்
கொஞ்சத்தை நீ விடவுமில்லை ஐயய்யோ!

2 comments: