எதிரியும் பகைவனும்,
உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்
அணைத்துக் கொண்டனர்
கள்ளுக்கடையில்...
அமெரிக்காவும் ரஷ்யாவும்,
இஸ்ரேலும் பலஸ்தீனமும்
கைலாகு கொடுத்தன
மதுக்கடையில்...
இலையான்களும் காக்காக்களும்
சங்கமித்தன
சாக்கடையில்...
எலியும் பூனையும்
உறவாடின
அடுக்களையில்...
கிறிஸ்தவனும் இஸ்லாமியனும்
கை கோர்ப்பார்களா
ஜெருசலோமில்..!
இந்துவும் இஸ்லாமியனும்
அனைத்துக்கொள்வார்களா
மக்காவில்..!
Tuesday, February 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
யாருடைய மனம் தூய்மையாக இருக்கிறதோ அங்கு நிச்சயம் மனிதம் இருக்கும். ஜாதி மதம் சமயம் எல்லாம் ஒன்று இவை இறைவனின் படைப்புக்கள் என்று எவன் சிந்திக்கிறனோ அவர்களிடம் மனிதம் இருக்கிறது.நீங்கள் கூறிய போல் யார் இணைந்து வாழ்கிறார்களோ அவர்களிடம் நாம் காணலாம்.
ReplyDelete