Friday, February 12, 2010

யாழ்ப்பாணம்

நாகர் வீரத்தின் நரம்புகளும் - மறவர்
நறுமணம் வீசும் தழும்புகளும்
நூங்கு மரத்தின் குழம்புகளும் - முது
நூலோர் முறுக்கிய பிரம்புகளும்
தேங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம் - அது
திராவிட இனத்தின் தேன்பானம்.

காதலர் குலாவும் ‘கஜுனா’கடலோரம் - மான்
மாதுகள் நீராடும்கீரி மலையோரம்
ஆழ்வளம் பொழில் நிலாவரையும் - பல
அன்னியர் வியக்கும் அதிசயமும்
மான், மரை கொண்டது யாழ்ப்பாணம் - தமிழ்
மானம் காத்ததும் யாழ்ப்பாணம்.

அண்டி வளர்த்த எம்பூமி - இன்று
மண்டிக் கிடக்குது ஏன்சாமி
சுண்டி விதைக்கும் நெல்மணிகள் - வெடி
கண்டு கிடக்குது பிணபூமி
குண்டடி பட்டதும் யாழ்ப்பாணம் - ஷெல்
எண்டு படுத்ததும் யாழ்ப்பாணம்.

நஞ்சு படர்ந்து போனதனால் - விதி
விஞ்சும் வீரர் மடிந்ததனால்
தென் மன்னவர் செய்சதியதனால் - சிக்கி
சின்னா பின்னமா னதனால்
மதிப்பை இழந்தது யாழ்ப்பாணம் -மறு
பதிப்பை எடுக்குமா யாழ்ப்பாணம்.

No comments:

Post a Comment