முந்தநாள் முளைச்ச நெல்லு
மூன்று இலை போடுமென்று
சொல்லி வைத்த வேதியர்கள்
சாத்தி ரங்கள் படித்தவக...
வீட்டோடு பிறந்த பிள்ளை
வீணாகிப் போகு மெண்டு
காதோரம் சொல்லி வைச்ச
கதையை நான் சொல்லிடவா...
எங்கம்மா பிறந்த போது
எதிரி யெண்டு சொன்னவக
அவபிள்ளை நான் பிறக்க
அரி வாளை எடுத்தவக...
ரோட்டோரம் போகும் போது
ரொம்பத் தான் இதழ்ந்தவக
வீட்டோரம் போகும் போது
விரட்டி யெனை அடிச்சவக...
ஏட்டோடு போன மகன்
பாட்டோடு வருனா ணெண்டு
வீட்டோரம் சொல்லி வைக்க
விச ரெண்டு சொன்னவக...
பாட்டோடு பட்டம் வர
பாரதியா ரெண்டு சொல்லி
வீட்டோடு வர வழைத்து
விருந் துண்ணக் கொடுக்குதுக.
தலை வாழை இலைபோட்டு
தலை மாமன் மகள்மாரும்
தவறாது கொடுக்க வெண்டு
தரமாக சமைக் குதுக.
Tuesday, February 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment