தாயென்னை பெற்றெடுத்து விட்டாள் - செந்
தமிழ் தன்னை வளவென்று உலகில்
மன மென்னை விடவில்லை தினமும்
சினங் கொண்டு வளவென்று தமிழை...
யாரிங்கு வந்தாலும் செந் தமிழை
பாழ்கெட்டுப் போக விடுவேனா இடைநடுவில்
தீதென்றும் பாதென்றும் பாரேன் - அது
மாதென்ற போதினிலும் நான்கெட்டுப் போகேன்
உறவென்று வந்தாலும் பாரேன் -அது
விறகென்ற போதிலும் நான்கரிந்து போகேன்
திறவென்று வந்தாலும், மயிரென்று உயிரை
பறவென்று விடுவேன் மகிழ்வோடு அதனை
‘சா’ ஒன்று வந்தாலும் என்பின்னே
‘சோ’வென்று பெய்வேன் ‘பா’கொண்டு முன்னே
போவென்று சொன்னாலும் தமிழ்க்கண்ணை – நெஞ்சில்
வேல்கொண்டு காப்பேன் தோளோடு வுன்னை.
Saturday, February 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment