Friday, March 5, 2010

அன்புள்ள எதிரிக்கு...

யன்னலோர மின்னலாய்
பின்னலோடு வந்தவளே
அந்தியிலே சந்திரன்போல்
சந்தியிலே மறைந்தவளே
வம்பான எதிரியென
பண்பாக பெயரெடுத்த
தெம்பான எதிரிக்கு - எனது
அன்பான வணக்கங்கள்

பருதியின் பாகத்தில்
பாற்கடலின் வேகத்தில்
கரைபுரண்டு வந்தவளே
நுரைபுரண்டு போனவளே
பாதிலிலே போனாலும் - நான்
பதைபதைத்து நின்றாலும்
பண்பான எதிரிக்கு
பல்லாண்டு வணக்கங்கள்

கவியேதா கமென்றாய்
கலங்கரையே விளக்கென்றாய்
புவியேமா றுமென்றாய்
பெருக்கெடுத்துப் போகுமென்றாய்
திதியே மாறினும் - என்
மதியென்றும் மாறாதென்றாய்
அடியேய்நான் நினைக்கலையே –உன்
இடிமனசு மாறுமெண்டு

இராப்பூமல ரும்போது
விறைப்பு இருக்குமென
சிறப்பாய் கொணரந்தேன்
மரப்பாய் உனக்கெண்டு
மறுப்பாய் நீசொன்னாய்
தரைப்பாய் போதுமென – நான்
வெறுப்பாய்நினைத் ததில்லை –வாழ்வு
கறுப்பாய்போ குமெண்டு....

No comments:

Post a Comment