பருக வருவோர்க்கு
பஞ்சமின்றி –
பாதீடு கொடுத்தவள் நீ...
கலவியில் கள்வரையும்
உயிர் பிரிதல் -
வெல்வோரையும்
உறங்க வைத்தவள் நான்...
ஊரார் உன்னை உரசியபோதும்
உலுக்கியுனை எடுத்தபோதும்
‘போ’ என்று சொல்லாமல்
பொறுப்பாய் நின்றவள் நீ...
எனக்கோ –
சாய்ந்து படுக்கவும் முடியலை
பாய்ந்து அதை -
தடுக்கவும் முடியலை
இருந்தும் -
தேய்மானம் இன்றி
தேய்ந்து கொடுத்தோம்
வருமானம் இன்றி
வாடகைக்கு விடப்பட்டோம்...
இப்போ –
சுருட்டி எனை எடுத்து
சுடுகாட்டில் போட்டுவிட்டான்
சுனை கெட்ட என் சீமான்
அதனால்,
நடுத்தெருவில் நாயாய்
நனைந்து கொண்டிருக்கின்றேன்.
தங்கையே-
போதும் உன்
பொதுப் பணி
அக்கா நான் சொல்கிறேன் கேள்...
அன்புள்ள
‘ஆவுரேஞ்சு கல்’லுக்கு
அக்கா ‘பாய்’ எழுதும்
பரிதாப மடல்.
Tuesday, March 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment