Friday, March 5, 2010

ஏன்டிபுள்ள பொங்கவைச்சே..

தெற்குத்தென் தெருவோரம்
தேங்காய்கள் விக்கேக்க
பாக்கிலே சுண்ணாம்பு
பக்குவமா சொதப்பேக்க
நாக்கிலே சிவப்பதுபோல்
நனயவந்து நின்றவளே
பருவமும் அறியாம
ஏன்டீபுள்ள பொங்கவைச்சே...

எழவுவிழுந் தவீட்டில்
சலவைக்கே சுரண்டேக்கை
செலவுக்கு என்னபண்ண
உணவுக்கே உதைக்கிறது
களவுக்கு போய்வரவா?
கழுத்திலே சுருக்கிடவா?
எழவுக்குப் பிறந்தவளே
ஏன்டீபுள்ள பொங்கவைச்சா

அப்பனாத்தா இருந்திருந்தா
ஆளுக்கொரு தேருகட்டி
ஆரவாரம் செய்திருப்பா
ஆலத்தி எடுத்திருப்பா
பொங்கல்வைக்க போறனெண்டு
பொருட்டும் சொல்லாமல்
புறத்தாலே போகேக்க
ஏன்டீபுள்ள பொங்கவைச்சே...

பத்துவய சிற்கேபுள்ள
பன்னிரண்டு நாளிருக்க
என்னபுள்ள பண்ணிவைச்சே
என்னத்திற்கு கொள்ளிவைச்சா
பொங்கவைக் கப்போறனெண்டு
சொல்லிவைக்க கூடவில்லை
இந்தச்சீக் கிரத்தில்
ஏன்டீபுள்ள பொங்கவைச்சே...

குந்திமக பேழையிலே
முந்தியனுப் பிவைச்சா- இது
பிந்திடிச்சே என்னசெய்ய
பிறப்பொண்டு ஒட்டிச்சே
அந்திகரு கையிலே
ஆருக்கும் தெரியாம
சீக்கிரம அனுப்பி வைச்ச
சிவனேண்டு போயிடுவா

No comments:

Post a Comment