Tuesday, August 18, 2009

அகதி முகாமில்…...


ஆடைக்குள் உடல் மறைத்து
பாவாடைக்குள் இடை குளித்து
சாடைக்கு குடை பிடித்தாயன்று.

வாடைக்கு இடையுமில்லை -பெண்
யாடைக்கு நடையுமில்லை – சா
வாடைக்கு தடையுமில்லை இன்று.

பாடைக்கு சொல்லிவிடு - முகாமில்
பீடைக்கு மழை வருது - –உயிர்
தாடைக்கு மேல்வருது என்று...

No comments:

Post a Comment