வேசத்தை மாற்றி விடு – கடும்
மோசத்தை தாழ்த்தி விடு
தேசத்தை வென்றிடவே – உந்தன்
நேசத்தை பாய்ச்சி விடு.
சிந்தித்துச் செயலாற்று – சில
சிந்தனை களை வீசு
தூசித்து நீ திரியும் - அந்த
செயல்களை மாற்றிடு.
வாசித்து நீ நடந்தால் - உலகம்
பூசித்து வாழ்த்துமடா
யாசித் திருக்கையிலே –உந்தன்
யோசனை தீருமடா.
தந்தந்தை நீக்கிவிடு – பாச
பந்தத்தை போக்கிவிடு
சொந்தத்தை யுருவாக்கு – நாட்டில்
சுதந்திரம் தனை மூட்டு.
மண்ணுக்கியாகு முடலை - இனிய
பண்ணுக்கு உரமாக்கு
எண்ணை என்னுகையில் - நல்
எண்ணையாய் ஆகிவிடு.
Friday, August 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment