Tuesday, August 11, 2009

சுனாமி எச்சரிக்கை!

இந்து சமுத்திரத்தில் அந்தமான் தீவுக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியை அண்டி கடற்பரப்பில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தினால் இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்த சமுத்திரத்தின் அந்தமான் தீவுக்கு அருகில் இன்று அதிகாலை (11.08.2009) 1.25 அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்ததாக இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அறிவித்திருந்தன.

இதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஒன்றினையும் அந்த நாடுகள் விடுத்திருந்தன. (குறிப்பாக இந்தியா மற்றும் பங்களாதேஷ்) இதனை தொடந்து இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி எச்சரிக்கை மையம் ‘சம்பிரதாய ரீதியாக’ தனது பங்கிற்கு பணியினை செய்திருந்து; ஆனால் சற்று தாமதித்து!

இலங்கையின் முதலாவது எச்சரிக்கை இன்று அதிகாலை 2 மணியளவில் விடுக்கப்பட்டது. அது எச்சரிக்கையாக அல்ல தகவலாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எமது ஊடகமும் அடங்கலாக.

இதனை தொடர்ந்து ‘தடல் புடலாக’ இரண்டாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டது அதிகாலை 2.35 அளவில்! அதில் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கையுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமுத்திர பிரந்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்து 1 மணித்தியாலம் 10 நிமிடங்கள் பின்னர்!

ஆனால் இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படும்போது இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் தமது சுனாமி எச்சரிக்கையினை வாபஸ் பெற்றிருந்தமைதான் வேடிக்கை!
அதன் பின்னர் நாம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி எச்சரிக்கை நிலையத்தினை தொடர்பு கொண்டபோது அதற்கு ‘சலாப்பல்களான’ பதில்கள் கிடைத்தன.

இதன் மூலமாக ஒன்றனை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை சுனாமி எச்சரிக்கை மையம் சுயமாக செயற்றடவில்லையென்பதனையும் தொழில் நுட்பம் மற்றும் முன்கூட்டிய அறிவித்தலை விடுக்கும் திறன் இலங்கை வளிமண்டலயவில் திணைக்களத்திடம் இல்லை என்பதனையும்! உயிர்களின் போராட்டமான இந்த எச்சரிக்கை தொடர்பில் இந்த மையம் போதிய கவனம் எடுத்ததாக தெரிவியவில்லை. ‘இன்னொரு சுனாமி வரட்டும் மனித உயிர்களை காவு கொள்ளட்டும்’ அப்போதாவது புரிகிறதா பார்போம் உயிர்களின் விலைகள் மலிவு அல்ல என்று!

No comments:

Post a Comment