Tuesday, May 26, 2009

கொட்டியது மனித ரத்தம்!

கொட்டியது கொடிய யுத்தம் - தினம்
சொட்டியது மனித ரத்தம்
தட்டினான் உயிர்களை நித்தம் - யமன்
சூட்டினான் தினம் 'ஹெலி' முத்தம்.

நடந்தது தினமும் இறப்பு – அந்த
உயிர்களுக்கு ஏது மறு பிறப்பு
தளிர்க்கிறது தன்மான விருப்பு – தினமும்
துளிர்க்கிறது மரணங்களில் தளிப்பு.

கொடுத்திட்டான் ஆயுதம் வல்லரசன் - அதை
தடுத்திட யாருமில்லை மல்அரசன்
எடுத்திட்டான் உயிர்களை கல்அரசன் - இதை
தடுத்திட தருணம் வரவில்லை 'ஐ.நா.' வரசன்.

No comments:

Post a Comment